பிரான்சில் வெளிநாட்டு பயணிகளுடன் பயணித்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பா முழுவதும் பேருந்து சேவை வழங்கி வரும் ஜேர்மனி-யின் FlixBus நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, 33 பேருடன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து, பிரித்தானியா தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டுள்ளது.
வடக்கு பிரான்ஸ் Somme, Saint-Quentin அருகே ஏ1 மோட்டார் பாதையில் சென்றுக்கொண்டிருந்த போது மழை மற்றும் காற்று காரணமாக சறுக்கிய பேருந்து, சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு தாறு மாறாக உருண்டு சென்றுள்ளது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த பெண் ஓட்டுநர் உட்பட 32 பயணிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours