(அறிவு)
தினக்குரல் அடங்கலாக தமிழ் தேசிய பத்திரிகைகளின் கவிதை பக்கங்களை அலங்கரிக்கின்ற கவிஞர் காரையன் கதன் கலைஞர் சுவதம் - 2019 திட்டத்தின் கீழ் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சிவானந்தராஜா கதன் என்கிற இயற்பெயரை கொண்ட இவர் காரைதீவை சேர்ந்தவர் என்பதால் இலக்கிய உலகத்தில் காரையன் கதன் என்கிற பெயரில் உலா வருகின்றார்.
காரைதீவு பிரதேசத்தில் கலை, இலக்கிய துறைக்கு இவர் ஆற்றி வருகின்ற மகத்தான சேவைகளுக்காக இவருக்கு கலாசார அலுவல்கள் திணைக்களம், காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு பிரதேச கலாசார அதிகார சபை ஆகியன இணைந்து இவருக்கான கௌரவத்தை வழங்கின.

Post A Comment:
0 comments so far,add yours