துறையூர் தாஸன்

களுவாஞ்சிக்குடி சைவமகா சபையின் 67 ஆவது ஆண்டு நிறைவும் அறநெறி மாணவர் கலை விழாவும் களுவாஞ்சிக்குடி சீ.மு.இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்றது.

சைவமகா சபைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான க.மதிசீலன் தலைமையிலான இந்நிகழ்வில், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பேராசிரியை திருமதி அம்மன்கிளி முருகதாஸ் பிரதம அதிதியாகவும் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு அறநெறி மாணவர்களின் அரங்காற்றுகைகளின் ஒரு பகுதியினை கண்டுகளிப்பதை படங்களில் காணலாம்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours