இ.சுதாகரன்

மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் ஏற்பாட்டில் தமது நிருவாக எல்லைக்குட்பட்ட துறைநீலாவணை முதல் குருக்கள்மடம் வரையான 11 கிராமங்கள் பதிவு செய்யப்பட்ட சுமார் 596 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டமானது வருடம் தோறும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே வேளை இம்முறையும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போசாக்கு உணவு வழங்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக எல்லைக் கிராமமான துறைநீலாவணைக் கிராமத்தில் உள்ள தாய்சேய் மருத்துவமாது நிலையத்தில்  கர்ப்பிணித்தாய்மாருக்கு சுமார் 1200 ரூபா பெறுமதியான போசாக்கு பொருட்கள் வழங்கப்பட்டன.பொதியில் பருப்பு 2கிலோ இபாசிப்பயறு 2கிலோஇ கடலை 2கிலோ இநெத்தலிக்கருவாடு 1கிலோ வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours