வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியவர்கள் மற்றும் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்த மக்களையும் பார்வையிட்டு அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
ஊன்னிச்சை குளத்தின் நிலைமையினை பார்வையிட்ட போது தற்போது நீரின் மட்டம் குறைவடைந்துள்ள நிலைமையிலும் மூன்று வான் கதவுகள் மூன்று அடி வரை திறந்திருந்தமையும் அவதானிக்க முடிந்தது. அதே வேளையில் அதிகளவான மீன்கள் மீனவர்கள் பிடித்து வருவதும் அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் தரமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டமையும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் உத்தியோக பூர்வமாக 6287 குடும்பத்ததை சேர்ந்த 21104 பேர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours