( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது பிரதேசத்தின் முன்னணி விளையாட்டு கழகங்களுள் ஒன்றான ஸஹிரியன் விளையாட்டு கழகத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான முதலாவது அழைப்பு சினேகபூர்வ மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து கிறிக்கட் போட்டியில் அட்டாளைச்சேனை பைனா விளையாட்டு கழகத்தை 8 விக்கட்டுகளினால் வெற்றி கொண்டுள்ளனர்.
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை மைதானத்தில் இடம்பெற்ற 17 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை பைனா விளையாட்டு கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடி 17 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றனர். அட்டாளைச்சேனை பைனா விளையாட்டு கழகத்தின் சார்பில் முஹம்மது சஜாத் 50 ஓட்டங்களையும் , எம்.சபீத் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது ஸஹிரியன் விளையாட்டு கழகத்தினர் 15 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தனர்.
சாய்ந்தமருது ஸஹிரியன் விளையாட்டு கழகத்தின் சார்பில் அணித்தலைவர் எம்.ஏ.றஸ்மி 4 ஓவர்களில் 23 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு வழியமைத்தார்.
அணியின் வீரர் முஹம்மது காலிதீன் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்று அணித்தலைவருடன் இணைப்பாட்டமாக 110 ஓட்டங்களைப் பெற்றனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக அணித்தலைவர் எம்.ஏ.றஸ்மி தெரிவு செய்யப்பட்டார்.
Post A Comment:
0 comments so far,add yours