(காரைதீவு நிருபர் சகா)

நிந்தவூரில் முதலாந்திகதியன்று ஜனாதிபதியின் அரசஊழியர் கடமையேற்பு வைபவத்தில் தாக்கப்பட்டு கல்முனை ஆதாரவைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றுவரும் திருமதி தவப்பிரியா சுபராஜ் தொடர்பான விரிவான விசாரணை இன்று  வியாழன்(9) நடைபெறும்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின்கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் இஸதீன் லத்தீப் இத்தகவலைத் தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின்கல்முனைப்பிராந்திய அலுவலகத்தில் நடைபெறவிருக்கும்இவ்விசாரணைக்கு தாக்குதல் நடாத்திய நிந்தவூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.எம்.கார்லிக் அழைக்கப்பட்டுள்ளார்.

அவரின் தலைமை அதிகாரியான அம்பாறை மாவட்ட கமநலசேவைதிணைக்களத்தின் உதவி ஆணையாளர் கல்முனைப்பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி மற்றும் கல்முனை ஆதாரவைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரிஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours