காரைதீவு  நிருபர்  சகா

அம்பாறை மாவட்டத்தில்  இன்று(26) வியாழக்கிழமை காலை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமக்கான பொருட்களைக்கொள்வனவு செய்வதில் மிகவும் துரிதமாக செயற்பட்டனர்.


காரைதீவு மாளிகைக்காடு மீன்சந்தையில் மீன்களைக்கொள்வனவு செய்ய முண்டியடித்தனர். அதேபோன்று  கோழி இறைச்சியைப் பெறுவதில் கியுவரிசையில் நிற்கவேண்டியேற்றப்பட்டது.

வங்கிகளில் ஏரிஎம்இயந்திரத்தில் பணத்தைப்பெற மக்கள் நீண்ட கியுவரிசையில் நின்றனர். பிரதானவீதிகளில் வாகனம் நிறைந்துகாணப்பட்டன. பொலிசார் பாதுகாப்பக்கடமைகளில் ஈடுபட்டனர்.

வீரகேசரி தினக்குரல் ஆகியபத்திரிகைகள் நேற்று விற்பனைசெய்யப்பட்டது. கடந்த 22முதல் 29 வரையிலான காலப்பகுதிக்கான வீரகேசரி ஞாயிறு இதழாக ஒரு பத்திரிகை வெளிவந்துள்ளது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours