சந்திரன் குமணன்
அம்பாறை.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள்,வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.
கடந்த முறையை விட இம்மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. ஆனால் இன்றைய தினம் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர்,அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம் ,உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் கடந்த முறையை விட அதிகமாக காணப்பட்டன.
அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸார் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினர்.
எனினும் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது. அத்துடன் சந்தாங்கேணி மைதானத்தில் தற்காலிக திறந்த சந்தை ஒன்று நிறுவப்பட்டிருந்தது.மேலும் சில வியாபார நிலையங்கள் சுப்பர்மார்க்கெட்டுகள் பாமசிகள் வங்கிகள் எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபையின் வருமான வரி உத்தியோகத்தர்கள் , அம்பாறை
மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இராணுவத்தினர் கூட்டாக திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தனர்.





Post A Comment:
0 comments so far,add yours