கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என நம்புவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை தற்போது சமூக மட்டத்தில் அதிகரித்தாலும் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என நம்புவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் கூடுதலாக அடையாளம் காணப்பட்ட பேருவளை, அக்குறணை, அட்டுளுகம, யாழ்ப்பாணம், புத்தளம், நீர்கொழும்பு, இரத்தினபுரி பகுதிகளில் தொற்று குறைந்துள்ளமையுடன் இப்பிரதேசங்களில் நோயாளிகள் தற்போது அடையாளம் காணப்படும் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours