நாளை மறுதினம் காலை முதல் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 19 மாவட்டங்களின் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் மக்கள் அதிகமாக வந்துசெல்லும் பகுதிகளில் இந்த தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் கலக தடுப்பு தண்ணீர் அடிக்கும் வாகனத்தின் உதவியுடன் இந்த தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனின் நேரடி வழிநடத்தலின் கீழ் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours