(நூருல் ஹுதா உமர்)

அம்பாறை மாவட்ட கல்முனை பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக முறையான வாகன தரிப்பிடம் இல்லாமல் காணப்பட்ட குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீரின் ஆலோசனையின் பேரில் கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லாவின் முழுமையான முயற்சியால் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரினதும் வாகனங்களை முறையாக தரித்து வைப்பதற்கான புதிய வாகன தரிப்பிடம் கடந்த செவ்வாய்க்கிழமை கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் எம்.ஏ.எம் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.மேலும் கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர பிரதி ஆணையாளர் எம்.ஐ பிர்னாஸ், இராச வாசல் கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் பேரவையின் தலைவரும், கல்முனை மாநகர பிரதம சுகாதர வைத்திய அதிகாரியுமான டாக்டர் எம்.ஜெ.கே.எம். அர்சாத் காரியப்பர், பிரதேச செயலக கணக்காளர் வை ஹபிபுல்லா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என் எம்.ரம்சான் உட்பட கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours