( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவுப்பிரதேசத்திலுள்ள 05 பரீட்சைநிலையங்களுக்கும் டெங்குத்தடுப்பு புகை விசிறப்பட்ட அதேவேளை கொரோனா தொற்றுநீக்கமும் செய்யப்பட்டுள்ளது.குறித்த பாடசாலைகளைச்சுற்றியுள்ள சூழலுக்கும் டெங்குத்தடுப்பு புகை விசிறப்பட்டது.
காரைதீவுப் பிரதேசசுகாதார வைத்தியஅதிகாரி டொக்டர் தஸ்லிமா பசீர் கூறுகையில்: பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதுகாப்பாக பரீட்சை எழுதுவதை உறுதிப்படுத்தும்பொருட்டு டெங்கு கொரோனாத்தடுப்பு நடவடிக்கைகளை ஞாயிறன்று 5நிலையங்களிலும் மேற்கொண்டோம்.




Post A Comment:
0 comments so far,add yours