இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.

நாட்டில் மேலும் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுதப்பட்டுள்ள நிலையில் இதுவரையான பாதிப்பு ஒரு இலட்சத்து 517ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 94 ஆயிரத்து 155 பேர் குணமடைந்துள்ளதுடன், தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 638ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 724 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, உலக அளவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாடுகளில் ஒன்றாகவும் கொரோனா பாதிப்பு வரிசையில் நோர்வேக்கு அடுத்து 89ஆவது நாடாகவும் இலங்கை பதிவாகியுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours