(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலக
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்
பிலவ வருடத்தின் முதலாவது வெள்ளிக்கிழமை விசேட பூசை வழிபாடுகள் இன்று 16.04.2021 நண்பகல் 12.00 மணியளவில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இடம்பெற்ற இவ்விசேட பூசை வழிபாட்டினை மாவட்ட செயலக
கணக்குக் கிளை மற்றும் மாவட்ட செயலக  உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகத்தின்
ஒழுங்கமைப்பில் இடம்பெற்றிருந்தது.

குறித்த விசேட பூசை வழிபாட்டினை மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ
உ.ஜெகதீஸ்வரக் குருக்கள் நடாத்தியிருந்ததுடன், பூசை வழிபாடுகளில் அதிகளவிலான உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours