(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு(றாசிக் நபாயிஸ்,

மருதமுனை நிருபர்))


அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் ஊடகவியலாளர்கள் மூவர் இன்று பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வு அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய தலைவர் கலாபூசணம் பி.எம்.எம்.ஏ. காதர் தலைமையில் சாய்ந்தமருது வெலிவெறியன் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது இவ் மூன்று ஊடகவியலாளர்களும்  பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது ஊடகவியலாளர்களான ஏ.எஸ்.கார்த்திகேசு றீயாத் ஏ.மஜீத் மற்றும் பி.முகாஜரீன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கியும் சம்மேளனத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் பி.எம்.எம்.ஏ.காதர் போரத்தின் சிரேஷ்ட ஆலோசகர்களான கலாபுசணம் மீரா.எஸ்.இஸ்தீன் மற்றும் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் எம்.எல்.எம்.ஜமால்டீன் செயலாளர் கலாநிதி ஏ.ஜே.எம்.ஹனீபா பொருளாளர் யு.எல்.எம்.இஸ்ஹாக் மற்றும் போரத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours