(திருக்கோவில் நிருபர் -எஸ்.கார்த்திகேசு(றாசிக் நபாயிஸ்,
மருதமுனை நிருபர்))
அம்பாரை மாவட்ட ஊடகவிலாளர் சம்மேளனத்தின் வருடார்ந்த பொதுச் சபைக் கூட்டமும் நிருவாகத் தெரிவும் இன்று இடம்பெற்று இருந்தன.
இவ் நிகழ்வானது சாய்ந்தமருது வெலிவெறியன் கிராமத்தில் அமைந்துள்ள எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தலைவர் கலாபூசணம் மீரா.எஸ்.இஸ்தீன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை(13) இடம்பெற்று இருந்தன.
இதன்போது தலைவரின் தலைமை உரையைத் தொடர்ந்து கணக்கறிக்கை வாசிக்கப்பட்டதைத் அடுத்து புதிய நிருவாகத் தெரிக்கு சென்ற போது ஏகமானதாக சிரேஸ்ட ஊடகவியலாளரும் முன்னாள் அமைப்பின் செயலாளருமான கலாபூசணம் பி.எம்.எம்.ஏ.காதர் தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக கலாநிதி ஏ.ஜே.எம்.ஹனீபாவும் பொருளாளராக யு.எம்.இஷ்ஹாக் ஆகியோரும் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய நிருவாகிகளாக தெரிவு செய்யப்பட்டு இருந்தனர்
இதேவேளை அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சிரேஷ்ட ஆலோசகர்களாக மூத்த ஊடகவியலாளர்களான முன்னாள் தலைவர் கலாபுசணம் மீரா.எஸ்.இஸ்தீன் மற்றும் ஏ.எல்.எம்.சலீம் எம்.எல்.எம்.ஜமால்டீன் ஆகியோரும் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டு இருந்தன.






Post A Comment:
0 comments so far,add yours