காரைதீவு சகா

அண்மைக்காலமாக கொரோனா தீநுண்மியின் தாக்கம் படுவேகமாக அதிகரித்துவருவதனால் காரைதீவுப்பிரதேசத்தில் அது தொடர்பான விழிப்புணர்வும் தடுப்புநடவடிக்கைகளும் பரவாலக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

காரைதீவு பிரதேச சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் தஸ்லிம பஷசீரின் வழிகாட்டலுக்கமைவாக பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் இரவு பகலாக உணவகங்கள் தொடக்கம் சில்லறைக்கடைகள் வரை சோதனையிட்டு வருகிறார்கள்.

தேவையான இடங்களில் அன்ரிஜன் சோதனையையும் நடாத்திவருகிறார்கள். மக்களுக்கான விழிப்புணர்வு அறிவுறுத்தல்களையும் அவ்வப்போது ஒலிபெருக்கிவருகிறார்கள்.
கொரொனத்தடப்புச்செயற்பாடுகளுக்க மக்களும் ஒத்துழைத்துவருகிறார்கள். அத்தோடு டெங்குத் தடுப்புச்செயற்பாடுகளும் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours