மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த தடை பொருந்தாது.

மேலும் கோவிட் நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கைக்கு அமைய சில வேளைகளில் மாகாணங்களுக்கு உள்ளேயும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று காலை இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து வெளியிடும் போது இந்தத் தகவைல வெளியிட்டார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours