(எம்.எம்.ஜபீர்)
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று மூன்றாம் அலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பானவர்களுக்கும் , கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குள் வருகை தந்தவர்களுக்கும் இன்று   வியாழக்கிழமை பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

நாவிதன்வெளி பிரதேசத்தில் 04பேர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .அதன்காரணமாக நாவிதன்வெளி - 01 , அன்னமலை - 01 , மத்திய முகாம் - 01 மத்தியமுகாம - 06 ஆகிய கிராமசேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் 45 நபர்களுக்கு பீ.சீ.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் வீ.வினோதினி தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எச்.எம்.ஜாபீர் . ஏ.எம்.றம்ஸீன், பற்சிகிச்சையாளர் எல்.ஜெஸ்மின் நகார் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் வீடு வீடாக பீ.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொண்டனர் .




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours