பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாரடைப்பு காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாகி மற்றும் அதற்குரிய தோட்டாக்கள் அவருடைய வாகனத்திலிருந்து கைப்பற்றப்பட்டன. அதனையடுத்தே, கடந்த மார்ச் மாதத்திலிருந்து அவர், தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours