கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த யாழ்.பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் ஒருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியை சேர்ந்த திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்த விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவர், யாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ச்சியாக சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரின் உடலை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Post A Comment:
0 comments so far,add yours