(விஜயரெத்தினம்)
துறைநீலாவணை கிராமத்தில் பொருத்தப்பட்ட தெருவிளக்குகள் சில பழுதடைந்துள்ளதாக பொதுமக்கள்,பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.களுதாவளை பிரதேச சபையினால் பரிபாலனம் செய்யப்படும் குறித்த தெருவிளக்குகள் பழுதடைவது பற்றியும்,சேதமடைவது பற்றியும் களுதாவளை பிரதேச சபையின் வேலைத்தள மேற்பார்வை குழுவினர் இதனை கண்டும் காணாமலும் இருப்பதை துறைநீலாவணை பொதுமக்கள் கவலை அடைகின்றார்கள்.
இதேவேளை கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் துறைநீலாவணை மக்களின் ஏகோபித்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட துறைநீலாவணைக் கிராமத்திற்கான பிரதேச சபை உறுப்பினர் இவ்விடயமாக கவனம் செலுத்தாமல் மௌனம் காப்பது ஏனென்று ? துறைநீலாவணை இளைஞர்கள்,பொதுமக்கள் கேள்வி கேட்டு அங்கலாய்க்கின்றார்கள்.
இதேவேளை களுதாவளை பிரதேச சபைக்குட்பட்ட நூலகங்களின் வளாகங்களிலும்,நூலக கட்டிடங்களின் கூரைகளிலும் குப்பைகள் காணப்பட்டு நூலகம் துப்பரவு அற்று காணப்படுகின்றதை எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது.



Post A Comment:
0 comments so far,add yours