சா.நடனசபேசன்

நாட்டில் கொவிட் 19 தாக்கம் அதிகமாக உள்ள வேளையில் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் பொதுமக்கள் உணவுக்காக பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதனைக் கருத்தில் கொண்டு களுவாஞ்சிக்குடி மண்ணின் மைந்தரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் களுதாவளை பிரதேசசபை உறுப்பினரும் சமூகசேவகருமான வினோ அவர்களால் 500 பேருக்கு   உலர் உணவுப் பொருட்கள் இன்று சனிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

அதவது  களுவாஞ்சிக்குடி  வடக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் மொத்தம் 500 பேருக்கான உதவி அவர் மூலம் வழங்கிவைக்கப்பட்டது.


இவர் கடந்த காலங்களில் கொவிட் 19 வைரஸ் காரனத்தினால் நாடு முற்றாக முடக்கப்பட்ட வேளையில் இவர் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது

தற்போது பல கிராமக்களுக்கு இவ் உதவியினை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours