அபு ஹின்ஸா
பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலய அரசியல், கல்வி, கலாச்சார செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹாத் அவர்களுக்கும் சிலோன் மீடியா போரத்தினருக்குமிடையிலான சந்திப்பு கிழக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப பேரவையின் தவிசாளரும், தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான கலாநிதி அன்வர்.எம்.முஸ்தபாவின் ஏற்பாட்டில் சம்மாந்துறையில் (11) இடம்பெற்றது.
இதன்போது ஊடகவியலாளர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம், தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்குதல் மற்றும் இலங்கை - பாகிஸ்தான் இரு நாட்டு ஊடகவியலாளர்களுக்குமிடையில் பரஸ்பர உறவினை ஏற்படுத்தல் போன்றவை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. இச்சந்திப்பில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருள் ஹுதா உமர், பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான், உதவிச் செயலாளர் எம்.எம்.ஜபீர், உறுப்பினர் எம்.நாஸிம் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours