சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் இந்த இரண்டு மில்லியன் கொவிட் தடுப்பூசிகளும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

இந்த தடுப்பூசிகளைக் கொண்டு மேல் மாகாணத்தில் 30 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours