ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மிக நீண்ட நாட்களாக அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பள முரண்பாட்டைக் களையக் கோரி ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில் ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை களையும் வகையில் சம்பள அதிகரிப்பினை மேற்கொள்ளும் முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பு சில கட்டங்களில் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours