எருவில் கிராமத்தில் covid 19 காரணமாக நாடு முடக்கப்படுள்ள நிலையில் 27 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான உலருணவு பொதிகள் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் ( எஸ்டா ) வழங்கி வைக்கப்பட்டன.எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஆலோசகரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய "தேசகீர்த்தி" ச. பேரின்பநாயகம் அவர்களின் வழிகாட்டலில் அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து இப்பணியினை முன்னெடுத்தனர் .இப்பணிக்கான நிதி உதவியினை எருவில் கிராமத்தை சேர்ந்தவர்களும் தற்போது மாலைதீவில் தொழிபுரிபவர்களுமான திரு சி . ஜெயராஜ்(31500/=) மற்றும்    திருதே .அகில்ராஜ்(10500/=) வழங்கியிருந்தனர் . அவர்கள் அமைப்பின் ஸ்தாபகர் "சமூக சேவகர்" அலையப்போடி வசீகரன் அவர்களிடம் வழங்கிய நிதி பங்களிப்பினை கொண்டு எஸ்டா அமைப்பின் உறுப்பினர்களால் சுகாதார நடைமுறையினை பேணிய வகையில் இப்பணி முன்னெடுக்கப்பட்ட து. இப்பணி சிறப்புற நடைபெற கடினமான சூழலிலும் களப்பணி புரிந்த அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கும் அமைப்பின் ஸ்தாபகர் அவர்களுக்கும் செயலாளர் இ . ஜீவராஜ் ஆசிரியர்  நன்றி தெரிவித்துள்ளார்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours