கடந்த நாட்களில் சுவிற்சர்லாந்தில் மகுடநுண்ணித்தொற்று (கோவிட்-19) பெருகி வருகின்றது. மருத்துவமனை நாடும் மகுடநுண்ணித் தொற்று நோயாளிகளின் தொகையும் பெரும் ஏற்றம் கண்டுள்ளது.

இதன் விளைவு சுவிற்சர்லாந்து நடுவனரசு முன்னர் அறிவித்திருந்த இயல்புவாழ்வு திரும்பும் திட்டம் தள்ளிவைக்கப்படவுள்ளது.

தடுப்பூசிச்சான்று

25.08.2021 சுவிற்சர்லாந்து அரசு விடுத்துள்ள முன் அறிவித்தலிற்கு அமைய புதிதாக உள்ளரங்குகள் அனைத்திலும் தடுப்பூசிச்சான்று கட்டாயமாக்கப்படலாம்.

மகுடநுண்ணிப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்த சுவிற்சர்லாந்தின் அரசு எண்ணம்கொண்டு கலந்தறிதல் கூட்டத்தினை துறைசார் நோய்தொற்றுத் தடுப்பு வல்லுணர்களுடன் நடாத்திவருகின்றது.

இதன்படி 30.08.2021 புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பாரக்கப்படுகின்றது

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours