2021, ஒக்டோபர் முதலாம் திகதிக்குப் பின்னர் நாட்டை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள் தற்போது, இறுதி செய்யப்பட்டு வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கிய பின்னர், சுகாதாரம், பொது போக்குவரத்து, விவசாயம், பொது சேவை மற்றும் தனியார் துறையை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்று ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours