சா.நடனசபேசன்
அவர் மேலும் தெரிவிக்கையில் பரீட்சைக்குத் தோற்றிய 1404 மாணவர்களில் தமிழ், கணிதம் உட்பட 783 மாணவர்கள் சித்திபெற்று உயர்தரம் கற்பதற்கான தகுதியினை பெற்றுள்ளதுடன் வலயத்தில் 9ஏ. சித்தியினை 24 மாணவர்களும், 8ஏ சித்தியினை 34 மாணவர்களும் பெற்று இருப்பதுடன் 151 மாணவர்களது அழகியல் பாடத்தின் பெறுபேறு வெளியிடப்பட இருப்பதுடன் இவர்களது பெறுபேறு வெளியாகும் பட்சத்தில் வலயத்தின் சித்தி வீதம் மேலும் 4 வீதத்தால் அதிகரிக்கக் கூடும் எனவும் வலயக்கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்.
அதேவேளை இவ்வருடப் பெறுபேறானது கடந்த வருடத்தினைக் காட்டிலும் அதிகரித்து இருப்பதுடன் இவ் அடைவுகளை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள்,உதவிக்கல்விப்பணிப்பாளர்கள்,கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours