-க.விஜயரெத்தினம்)


அனைத்து வளங்கள் இருந்தும் கிழக்கில் தமிழன் அடிமையாக வாழ வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
பூ.பிரசாந்தன் தெரிவிப்பு.

நிலவளம்,நீர்வளம்,மனிதவளம் என அனைத்து வளங்களும் தன்னகத்தே கொண்டுள்ள போதும் கிழக்கு மாகாண தமிழர்கள் தொடர்ந்தும் அனைத்து தேவைகளுக்கும்  அரசியல்,பொருளாதார இருப்புக்களுக்கும் ஏனையோரை நம்பி வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்

வவுணதீவு பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிளை குழு கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை(25)கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்....

இந்த உலகில் யாரும் யாருக்கும் அடிமையும் இல்லை.யாரும் யாருக்கும் அரசனுமில்லை.ஆனால் நிலவளம் நீர்வளம் மனிதவளம் என அனைத்து வளங்களும் காணப்படுகின்ற போதும் வவுனனதீவு பிரதேசம் உள்ளிட்ட  கிழக்கு மாகாணம் எல்லா வளங்களும் கொண்டு திகழ்கின்றது.கடல்வளம் குளங்கள் ஆறு நிலவளம் என அனைத்து வளங்களும் காணப்படுகிறது ஆனால் இந்த வழங்களை  கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தாமல் யாரோ ஒருவர் வந்து இந்த வளங்களை பயன்படுத்துகின்ற துப்பாக்கி நிலமை ஏற்படுகின்றது.அது மாத்திரமல்லாமல் பொருளாதார ரீதியாக மாற்று மாவட்டங்களிலும் ஏனைய அரசியல் தலைமைகளிடம் அரசியலுக்காகவும் நம்பி வாழ்கின்ற சூழல் ஏற்பட்டிருக்கின்றது.இதற்கு யார் காரணம்  வெளியில் உள்ளவர்கள் யாரும் அல்ல. தீர்க்கமான அரசியல் தலைமைகளை தெரிவு செய்ய முடியாமல் இருக்கின்ற எமது மக்களே பொறுப்பு கூறவேண்டிய இருக்கின்றனர்.
மக்களிடமிருந்து வாக்குகளைப் பெறுகின்ற அரசியல் தலைமைகள் தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும்.

ஆனால் தமிழர்களிடமிருந்து 60 வருடங்களாக வாக்குகளைப் பெற்ற அரசியல் தலைமைகள் தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்காத போதும், தமிழர்களினை தொடர்ந்தும் அடிமைகளாக மாற்று அரசியல் தலைமைகளிடம் கையேந்தி நின்ற சூழலையும், வாழ்வாதாரத்திற்காக  தங்களது வளங்களை பயன்படுத்த முடியாத சூழலையும் உருவாக்கி இருந்தார்கள்.அதுவே இன்று வறுமையில்  வவுணதீவு பிரதேசம்  முதன்மை இடத்தைப் பிடிப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றது.

தேர்தல் காலங்களில் வாக்களிக்கின்ற இயந்திரங்களாகவும்,தங்களது அரசியல் இருப்பை பாதுகாப்பதற்காகவும்,காலம் காலமாக ஏற்படுகின்ற முரண்பாடுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அதில் குளிர்காயும் அரசியல் தலைமைகளும் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து இருக்கின்றார்கள் என்பது மக்களுக்கு தெளிவாக இருக்கின்றது.தற்போதய அரசியல் சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்தி எமது மக்களின் எதிர்கால இருப்பை உருவாக்குவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.எமது கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும்  கிழக்கு மாகாணத்தின் அரசியல் இருப்பை நிலைப்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கின்றார்.இந்த சூழலை எமது சமூகமும் பயன்படுத்தி எதிர்காலத்தில் வலுவான சமூகமாக தமிழ் சமுகம் மாறுவதற்கு அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours