பல்கலைக்கழக மாணவர்களுக்காக, பல்கலைக்கழக வளாகங்களில் தடுப்பூசி வழங்கப்படும் திகதிகள் குறித்து, பல்கலைக்கழகங்களினால் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்தார்.
அதன்படி அந்தத் தினங்களில் சென்று மாணவர்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், குறித்த பல்கலைக்கழகங்கள், மாகாணத்தில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு போதுமான அளவு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதன் பின்னர், தடுப்பூசி வழங்கப்படும் திகதியை மாணவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours