(க.விஜயரெத்தினம்)



மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக டெங்கு உருவாகக்கூடியதான நிலமையை கருத்திற்கொண்டு பாடசாலைகளில் சுகாதரப்பிரிவினர்களினால் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.குறிப்பாக பாடசாலைகளின் வெளிப்புறச்சூழல்,நீர் தேங்கி நிற்கும் இடங்கள்,மலசலகூடங்கள் ,பீலிகள்,வாழைமரத்தடிகள்,பயம்படுத்தாத கிணறுகள்,தண்ணீர் தாங்கிகள் போன்றவை சுகாதாரப்பிரிவினரால் மிகக்கடுமையாக பரிசோதனைக்குட்படுத்தப்படு குடம்பிகள் அடையாளப்படுத்தப்பட்டு அவை அழிக்கப்படுகின்றது. தற்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் டெங்குத்தொற்றை  கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலைகள்தோறும்  திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

மட்டக்களப்பு ,மட்டக்களப்பு மத்தி,மட்டக்களப்பு மேற்கு, கல்குடா மற்றும் பட்டிருப்பு கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளே இவ்வாறு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமையை அவதானிக்க கூடியதாகவுள்ளது.கொவிட் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதுபோன்று டெங்கு தொற்றிலிருந்து மாணவர்களையும்,பாடசாலை நிருவாகத்தையும் பாதுகாப்பதே சுகாதாரத்துறையினரின் செயற்பாடாக இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்கள பணீமனையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக டெங்கு குடம்பிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் இருப்பிடங்களையும்,திணைக்களங்களின் சுற்றுச்சூழலையையும் துப்பரவாக வைத்திருக்குமாறும்,பொதுமக்களினால் கழிவகற்றப்படும் கழிப்பொருட்களை தரம்பிரித்து பொறுப்பான உள்ளுராட்சிமன்றங்களின் திண்மக்கழிவு சேகரிப்பு வாகனத்திடம் ஒப்படைத்து பொதுமக்களையும்,குழந்தைகளையும்,பாடசாலை மாணவர்களையும்,வயோதிபர்களையும் டெங்கிலிருந்து பாதுகாக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஒலிபெருக்கி மூலம் அறிவித்து விழிப்பூட்டும் நடவடக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதேவேளை மழைநீர் தேங்கி நிற்கும் இடங்கள்,வடிகான்களில்  துப்பரவு வேலைகளை உள்ளுராட்சி மன்றத்தினரும்,வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களும் முன்னெடுத்து வருவதுடன் டெங்கு உருவாக்ககூடிய இடங்களை வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours