(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

"உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்
காலம்'' எனும் திட்டத்தின் கீழ்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் 31
பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் பெறுமதியான காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று
திங்கட்கிழமை (11) ஆந் திகதி மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி.வி.சிவப்பிரியா தலைமையில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கேட்போர்  கூட மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்ததுடன்,
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன்,  மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஸ்ட
மாவட்ட முகாமையாளர் க.ஜெகநாதன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours