( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சிஅம்மன் ஆலய வளாகத்தில் மலர்க்கன்றுகள் நேற்று நடப்பட்டன.

இறைவனுக்கு சாத்தும் மலர்களைத்தரக்கூடிய மல்லிகை செவ்வரத்தை போன்ற மலர்க்கன்றுகனே இவ்விதம் மழைபெறும் இக்காலகட்டத்தில் நடப்பட்டன. ஆலய மகாகும்பாபிசேகம் பெரும்பாலும் எதிர்வரும் தைமாத இறுதியில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்ற இவ்வேளையில் மலர்க்கன்றுகள் நடப்பட்டன.

ஆலயபரிபாலனசபைத்தலைவர் கி.ஜெயசிறில் ஆலய ஆலோசகர் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா நிருவாகத்தினர் மற்றும் ஆலயத்திற்கு வருகைதந்திருந்த அம்மன் அடியார்கள் இம்மலர்க்கன்றுகளை நட்டுவைத்தனர்.

நட்டு அரைமணிநேரத்தில் 'சோ..'வென மழை பொழிந்தமை குறிப்பிடத்தக்கது.

நூற்றுக்கணக்கான  இம்மலர்க்கன்றுகள் வளர்ந்துவருகின்ற பட்சத்தில் வெளியிலிருந்து ஆலயத்திற்கு மலர்கள் கொண்டுவருவதற்கான தேவை குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours