இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்குடா கல்வி வலயத்தில் உள்ளதெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்குகிருமித் தொற்று நீக்கிகள் வழங்கிவைப்பு.              ROTARY CLUB OF COLOMBO MIDCITYயின் அனுசரணையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில்புதன் கிழமை (17) சந்திவெளி சித்திவிநாயகர்வித்தியாலய அதிபர் ம.சிவசுந்தரம் தலைமையில் கோறளைப்பற்று கோட்டக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 10 பாடசாலைகளுக்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான கிருமிதொற்று நீக்கிகள் சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் வழங்கிவைக்கப்பட்டன.

 .இதில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமாகிய பொன்னுத்துரை உதய ரூபன் அவர்கள்கலந்து கொண்டதுடன் கோறளைப்பற்று கோட்டக்கல்வி அலுவலகத்திற்குரிய தெரிவு செய்யப்பட்டபாடசாலைகளுக்கு  தொற்று நீக்கிகள் அடங்கிய பொதியும் வழங்கி வைக்கப்பட்டன மேலும் மட்டக்களப்பு மேற்கு வலய,மண்முனை மேற்கு கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட 30 பாடசாலைகளுக்கு கடந்த திங்கட்கிழமை 4 லட்சம் ரூபாய் பெறுமதியான கிருமித் தொற்று நீக்கிகள் வழங்கிவைக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு கல்வி வலய ஏறாவூர் பற்று கோட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கிருமித் தொற்று நீக்கிகள் வழங்கிவைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours