மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் டெங்கு தாக்கம் உள்ள பகுதிகளில் புகை விசிறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் டெங்கு தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அப்பகுதிகளில் புகை விசிறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மாமாங்கம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கிஷான்தராஜ் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours