(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு விளாவட்டவான் கிராமத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற இந் நிகழ்வில் கிராமங்களில் சமூக சேவைகளில் முன்னிலையில் திகழ்ந்த ஏழு பெண்கள் பாராட்டி
கெளவிக்கப்பட்டனர்.
அகிலத்தில் சரிபாதி நாமே, அடிமையாய் வாழ்வது வீணே
எனும் கருப்பொருளுக்கு அமைவாக இடம்பெற்ற இம் மகளிர் தின நிகழ்வில் பெண்கள், பெண்ணியம் தொடர்பான கவிதைகள் மற்றும் சிறப்புரைகளும் இடம்பெற்றது
மேலும் இதன்போது வளவாளர் கணேசமூர்த்தி அவர்களால் பெண்கள் தொழில் விருத்தி மற்றும் மனைப் பொருளாதார மேம்பாடு தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது
இதன் போது மருத்துவம், கல்வி, பொது சேவை சமூகப்பணி போன்ற துறைகளில் தம்மை அற்பணித்து சேவை செய்த ஏழு பெண்கள் பாராட்டு கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் இரா. ஸ்ரீ ராஜ ராஜேந்திரன், பொதுச் செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் மற்றும் பிரதித்த் தலைவர் செயற்குழு உறுப்பினர்கள் கிராம மட்ட பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Post A Comment:
0 comments so far,add yours