கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலைப் பிரதேசத்தில் யானை தாக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த (54) வயதுடைய சின்னத்தம்பி சரவணப்போடி என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று (19) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த நபர் கடந்த (16)ம் திகதி தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள குளத்திற்கு மீன்பிடிப்பதற்காக காலை வேளையில் சென்று கொண்டிருக்கும் போது வீதியேரத்தில் மறைந்திருந்த யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் மரணமானவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் சட்ட விரோதமான முறையில் மின்சார வேலியினை அமைத்து காட்டு யானை ஒன்றினை உயிரிழக்கச் செய்துள்ளதாவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற் பதில் நீதிவான் வி.வினோவா இந்திரன்  அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours