அஸ்ஹர் இப்றாஹிம்


அம்பாறை மாவட்ட தேசிய இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியால மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

14 வயதுப்பிரிவில் அம்பாறை மாவட்டபாடசாலைகளுக்கு இடையிலான போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவிகள் இல்மா , இல்பா, அனூபா ஆகியோர் முறையே முதலாம் , இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று  வெற்றியீட்டி தேசிய ரீதியில் நடக்கவிருக்கும் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

அதேபோன்று பெண்களுக்கான 10 
வயதுப்பிரிவில் கல்முனை  அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவிகள் 1ம், 3ம் இடங்களில் வெற்றி பெற்று தேசிய ரீதியில் நடக்கவிருக்கும் போட்டிக்கும் தெரிவாகியுள்ளனர்.

இதில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பிரபலம் பெற்ற பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours