(காரைதீவு சகா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்தில் கன்னி கும்பாபிஷேகத்திற்கான எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று (4) திங்கட்கிழமை ஆரம்பமாகியது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் தலைமையில் இந்த கிரியைகள்(2) ஆரம்பமாகின.
எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இன்றும் (5) பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
ஆலய தலைவர் கி.ஜெயசிறில் தலைமையிலான அறங்காவலர் சபையினர் 3 மாதகாலத்துள் கும்பாபிஷேகம் நடாத்த ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
நாளை (6) புதன் கிழமை காலை 9.30 மணியளவில் ஆவர்த்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.




Post A Comment:
0 comments so far,add yours