(எஸ்.அஷ்ரப்கான்)


ஒலுவில் அல்-ஹம்றா  மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலையில்)  தரம் 6 புதிய மாணவர்களை வரவேற்கும் விசேட நிகழ்வு இன்று 09 திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் யூ.கே.அப்துர் ரஹீம் தலைமையில், உதவி அதிபர் எம்.எச்.மஹ்மூத் நஸீமின் வழி நடாத்தலில்  
இடம்பெற்ற இந்த  இந்நிகழ்வின்போது தரம் 6 புதிய மாணவர்களை தரம் 7 மாணவர்கள் மலர் தூவி இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

கவிஞர், சிரேஷ்ட ஆசிரியர் ஜே.வஹாப்டீனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் பிரதி அதிபர் கைறுந்நிஸா, உதவி அதிபர் முஹம்மட் றினீஸ் ஆகியோருடன் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours