ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முருகன்கோயில் வீதி மயிலெம்பாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபப் பெண் மண்ணெண்ணை விளக்கு நிலத்தி விழுந்து தீப்பிடித்ததில் பலியான சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முருகன் கோயில் வீதி மயிலெம்பாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான கிருஷ்ணபிள்ளை வள்ளிப்பிள்ளை என்பவரே பலியானவராவார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணத்தினால் குறித்த விட்டில் மண்ணெண்ணை விளக்கினை குறித்த பெண் சிறுநீர் கழிப்பதற்காக வெளியில் எடுத்துச்செல்லும் போது விளக்கு தவறுதலாக நிலத்தில் விளுந்து தீப்பிடித்த நிலையில் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்;.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைந்தார்.மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
Post A Comment:
0 comments so far,add yours