நூருல் ஹுதா உமர்

அகில இலங்கை சுகாதார சாரதிகள் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாண சுகாதார சாரதிகள் சங்கம் இரண்டாமிடத்பை் பெற்றுள்ளது.

09 மாகாண சுகாதார சேவைகள் பணிமனைகள் சார்பான சாரதிகள் சங்கங்களும் கலந்து கொண்ட குறித்த போட்டி இம்மாதம் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் கண்டி ரணவிம ரோயல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண சுகாதார சாரதிகள் சங்கத்தின் அணிக்கு தலைவராக செயற்பட்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் சாரதியாக செயற்படும் எம்.ஜே.எம். மர்சூக் அவர்கள் குறித்த சுற்றுப் போட்டித் தொடரின் சிறந்த ஆட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டதுடன் கிண்ணம் ஒன்றை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours