(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல், தஃவா குழுவின் ஏற்பாட்டில்  மாபெரும்  குடும்ப தர்பியா நிகழ்ச்சி  (23.12.2022) வெள்ளிக்கிழமை    மாலை 5.00 க்கு நடைபெற்றது.
 
தஃவா குழுவின் தலைவர் மெளலவி ஸாபித் (ஸரஈ, றியாதி) இன் வழி நடாத்தலில் இடம்பெற்ற தர்பியா நிகழ்ச்சியில்
பிரபல உலமாக்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

மெளலவி  அஷ்-ஷெய்க் ஆஸிக் ஸலபி, அஷ்-ஷெய்க் முர்ஸித் அப்பாஸி மற்றும் அஷ்-ஷெய்க் நியாஸ் ஸிராஜி ஆகியோர் காலத்திற்கேற்ற சிறந்த தலைப்புக்களில் சிறப்புரையாற்றினர்.

இங்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஊர்களிலிருந்தும் பிரதேசவாசிகள்  குடும்பத்தோடு கலந்து கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours