( வி.ரி. சகாதேவராஜா)

 திருக்கோவில் பொலிஸாரின் ஏற்பாட்டில் தர்மசீலா நிறுவனத்தின் அனுசரணையில் திருக்கோவில் புனித ஜோசப் தேவாலய சிறுவர் இல்ல பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 இந் நிகழ்வில் அக்கரைப்பற்று உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி.எச்.செனவிரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் திருக்கோவில் நிலைய பொறுப்பதிகாரி டபிள்.யூ.ஏ.டி.பி.  பத்ம குமார,சமூக பொலிஸ் பிரிவு உத்தியோத்தர் பி.எஸ்.விக்னேஸ்வரன்,சிறுவர் பெண்கள் அலுவலக நிலையப் பணிப்பாளர் கே.பி.ஓ.கி.விஜிதா,தேவாலய அருட்சகோதரிகள் உறுப்பினர்கள் ஆகியோர்   கலந்து கொண்டு இவ் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகளும் மேடையேறின.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours