(கனகராசா சரவணன்)
சரீரம் நிஷப்தபதி ஸ்ரீ லங்கா தேசிய மன்றத்தினால் மட்டக்களப்பு தாளங்குடாவில் அமைந்துள்ள கிருஷணர் ஆலயத்தில் மார்கழி திருப்பாவை உத்சவமும், நிஷப்தபதியின் 33வது ஆண்டு விழா நிகழ்வும் திங்கட்கிழமை (02.01.2023) நடைபெற்றது.
மகா விஷ;ணு சமேத சீதேவி, பூதேவிகளுடன் அருள் பாலிக்கும் சரீரம் நிசப்தபதி ஆலயத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு விசேட யாக பூசைகளும் இடம்பெற்றன.
இதன்போது பொருளாதார நெருக்கடியிலும் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் ஊடகப் பணியாற்றிவரும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 22 தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிக்ககப்பட்டனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மா.செல்வராசா, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் புண்ணியமூர்த்தி, மாவட்ட தகவல் அதிகாரி வ.ஜீவானந்தன் மற்றும் சிவாச்சாரியார்களும், சரீரம் நிஷப்தபதி ஸ்ரீ லங்கா தேசிய மன்றத்தினரால் இதன்போது விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், சமூக சேவையாளர்கள் பலரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களினால் கருதப்பட்டு வருவதானது விசேட அம்சமாகும்.
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours