( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் புத்தாண்டு மனமகிழ் விழாவானது கலை கலாச்சார பாரம்பரிய விளையாட்டு போட்டி நிகழ்வாக இன்று(3) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே .அதிசயராஜ் பிரதமர் விருந்தினராக கலந்து கொண்டார்.
பாண்டிருப்பு இந்து கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவம் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தரர்களால் நடத்தப்பட்டது.
புத்தாண்டை வரவேற்கும் முகமாக பாரம்பரிய கலாச்சார விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றன. தமிழ் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் பரஸ்பரம் புரிந்துணர்வு சந்தோஷமாக பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.





Post A Comment:
0 comments so far,add yours