சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இளையோருக்கான இருநாள் இலவச ஊடக செயலமர்வு இன்று (21) சனிக் கிழமை மாளிகைக்காடு பாவா றோயலி மண்டபத்தில் ஆரம்பமானது.
மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் ஊடகத்துறையில் ஆர்வமுள்ள அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் மாணவிகள் 40க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வில் கட்டுரை எழுதுதல் மோஜோ ஊடகவியல் (Mojo Journalism) ஆகியவை கற்பிக்கப்படுகின்றது.
இச்செயலமர்வு நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் அறிமுக உரையாற்றினார்.
மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் திட்ட இணைப்பாளர் எம்.பிரதீபன் நிகழ்வு பற்றிய விளக்க உரையாற்றியதுடன்
மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் பயிற்றுவிப்பாளர் என்.மணிவாணன் பங்குபற்றுனர்களுக்கு சிறப்பாக விரிவுரையாற்றினார்.




Post A Comment:
0 comments so far,add yours